பாவலர் மணி பொன் நிலவன் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
பாவலர் மணி பொன் நிலவன் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

ஞாயிறு, 4 ஜூன், 2023

பாவலர் மணி பொன் நிலவன்


 

எத்தனை கூட்டம்

வளைந்தும் நெளிந்தும்
குழைந்தும் பிறரால்
வாழ்வது சிறுமையடா – தினம்
அலைந்தும் திரிந்தும்
உழைத்தே வாழ்ந்தால்
அதுவே பெருமையடா
 
இறக்கும் வரைக்கும்
அறிவில் லாமல்
இருப்பதும் அவலமடா – உன்
செருக்கும் சிறப்பும்
அழிந்திடும் போது
சிரிக்கும் உலகமடா
 
இரவல் உயிரைத்
தனக்குள் தாங்கி
இத்தனை ஆட்டமடா – நீ
இரவில் படுத்தே
எழாமல் விடிந்தால்
எத்தனை கூட்டமடா!

*******************************************************************************************

அனைத்தும் பொய்யடா!
 
நாலு காசு கையில் வந்தால்
      நட்பை மறக்கிறான் – தம்பி
நாலுபேரு உடனிருந்தால்
      நாலும் மறக்கிறான்.
 
ஆளுபேரு பதவியென்றே
      ஆளாய்ப் பறக்குறான் – தம்பி
நாளை நமது கையிலுண்டா?
      நடப்பை மறக்குறான்.
 
பாசம்நேசம் பற்றையெல்லாம்
      தூசு காண்கிறான் – தம்பி
மோசம்போகும் பாதையைத்தான்
      மோட்சம் என்கிறான்.
 
வேசம்போடும் மனிதரைத்தான்
      வெளிச்சம் என்கிறான் - தம்பி
கோசம்போடும் கூட்டத்தைதான்
      கூவியழைக்கிறான்.
 
ஆறடியில் அடங்கிவிட்டால்
      அனைத்தும் பொய்யடா – தம்பி
பேரிடிக்கு முன்னேநல்ல
      பெயரை நெய்யடா
 
சீரடியாம் குறளடியைச்
      செவியில் கொள்ளடா – தம்பி
சீரழிவைக் கொண்டுவரும்
       செயலைத் தள்ளடா!

கவிஞர் சரவணன் இராமசந்திரன்

  நல்மழையே நில்!   வெள்ளத்தால் அடைந்ததுயர் விளக்கிடவும் கூடிடுமோ ? உள்ளத்தில் குடிகொண்ட உறுதியையும் போக்கிற்றே! கடும்வெள்ளம் கண்டவிடம் கண்ணு...