எங்கள் நாடு
இந்தநாடு எங்கள்நாடு
இந்தநாட்டு மண்ணிலே
இன்றிருக்கும் உயிர்கள்யாவும்
எங்கள்தாயின் பிள்ளையே
இந்தவானம் எங்கள்வானம்
இந்தவானின் மீதிலே
இங்கும்அங்கும் ஓடும்மேகம்
எங்கள்தாயின் கூந்தலே!
பாடுதென்றல் எம்மினத்துப்
பண்பெடுத்துப் பாடிட
ஓடுமாறும் இங்கிருப்போர்
ஒற்றுமையைக் கூறிட
காடுமேடு சீர்படுத்திக்
காதல்கொண்ட தந்தையர்
நாடுமலை நாடிதென்று
நாவினிக்கப் பாடுவோம்!
நான்பிறந்து நான்வளர்ந்து
நான்மணந்த நாட்டிலே
வீண்குழப்பம் இல்லையில்லை
வேற்றுமைகள் இல்லையே!
தேன்சுரக்கும் பூவடாநம்
தேசமக்கள் நெஞ்சமே
வீண்பகைக்கு வித்திடோம்
வீணர்களை விட்டிடோம்!
வந்துவந்து மக்கள்கூடி
வானளாவச் சேரினும்
தந்துதந்து பாலமுதம்
தாங்கிவந்த அன்னையைச்
சிந்துபாடிக் கைகள்கூப்பிச்
சிரங்கவிழ்த்து வாழ்த்தியே
எந்தநாளும் என்றனாவி
நான்மணந்த நாட்டிலே
வீண்குழப்பம் இல்லையில்லை
வேற்றுமைகள் இல்லையே!
தேன்சுரக்கும் பூவடாநம்
தேசமக்கள் நெஞ்சமே
வீண்பகைக்கு வித்திடோம்
வீணர்களை விட்டிடோம்!
வந்துவந்து மக்கள்கூடி
வானளாவச் சேரினும்
தந்துதந்து பாலமுதம்
தாங்கிவந்த அன்னையைச்
சிந்துபாடிக் கைகள்கூப்பிச்
சிரங்கவிழ்த்து வாழ்த்தியே
எந்தநாளும் என்றனாவி
உன்றனுக்கே என்றிடு!