கவிஞர் ரேவதி ஜீவநாதன் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
கவிஞர் ரேவதி ஜீவநாதன் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

ஞாயிறு, 4 ஜூன், 2023

கவிஞர் ரேவதி ஜீவநாதன்


 

தைப்பூசம்
 
தைத்திங்கள் பிறந்ததுவே  தரணியில் வளமாக
தைப்பொங்கல் பொங்கியதே  தமிழர்கள் இல்லமதில்
தைப்பூசம் மலர்ந்ததுவே  தரணிவாழ் முருகனுக்கு
தைதைகா வடியாடாது  தளர்ந்தனரே பக்தர்கள்!
 
கைக்கூப்பி வணங்குதற்கு  காத்திருக்கும் பக்தர்கள்
வைக்கும்கா ணிக்கைகள்  வடிவேலைச் சேரவில்லை
கைக்குழந்தை தொட்டிலிலே  கரும்புகளும் காணிக்கை
வைக்கும்நாள் கூடவில்லை   வந்துவிட்ட நச்சுயிரால்!

****************************************************************************************

அன்பையள்ளும் திருநாள்
 
அன்பெனும் நதியினிலே  ஆர்வமுடன் விளையாடி
அன்புடனே நேசத்தால்  அகிலங்கள் கொண்டாடும்!
அன்பையள்ளும் திருநாளை  அனைத்தின்று மக்களுமே
அன்புநெறி போற்றிடவே  அகமகிழ்ந்து களித்திடுவர்!
 
மலர்களினால் பரிமாற்றம்  மனத்தையும் மயக்கிடுமே
உலர்ந்திட்ட உள்ளமதில்  உற்சாகப் பண்பாடும்!
நிலமங்கை பூரிப்பாள்   நின்மலனை வழிபட்டே
வலக்கரமும் பற்றிதினம்  வாழ்வுநலம் பேணிடுவாள்! 
 
காதலர்கள் தினமென்று  காலமெலாம் செப்புகின்றர்
வாதிட்டு சென்றிடினும்  வழக்கமதை மாற்றவில்லை!
சாதகமாய் பயன்பாட்டில்  சாதனையாய் ஆண்டுதொறும்
காதலர்நாள் சிறந்திடுதே கண்டுமனம் சொக்கிடுதே!

கவிஞர் சரவணன் இராமசந்திரன்

  நல்மழையே நில்!   வெள்ளத்தால் அடைந்ததுயர் விளக்கிடவும் கூடிடுமோ ? உள்ளத்தில் குடிகொண்ட உறுதியையும் போக்கிற்றே! கடும்வெள்ளம் கண்டவிடம் கண்ணு...