மின்னிதழ் ஆளுமை கொள்ளும்
வளிபொரு மின்னொடு வாய்திடு மழுததம்
மழையென பொழிதல் மன்னுயிர்க் குயிர்ப்பே
விழிபடும் மின்னிதழ் மேவிடு வோர்கள்
விழைவுறும் பயனால் மேன்மை அடைவர்!
வலிபெற மரபின் வழிமுறை யறிந்து
மன்னிய கவிதை மறுவிலா தளிப்போர் !
அளிதரும் பொன்னென அழகுற மின்னி
அகத்திடை நாளும் ஆளுமை யுறுமே!
புகழ்படா தோரையும் புவனம் போற்ற
பூந்தமிழ்ப் புலவரால் பெற்றிமை பெறவே!
திகழ்வுறு மரபின் சிறப்பினையோர்ந்து
தோயுறு மனத்தே செந்தமிழ்க் கவியோ !
இகழ்படா தொளிரும் ஏற்கும் மனத்தே!
ஈதறி யாதார் எள்ளுறும் படியே
மிகநலம் நாடி வீழரு வியென
மேன்மை விருதால் விளங்குதல் நகைப்பே
போலிமை புகழால் பீற்று வோர்கள்
புதுக்கிய மரபொடு பிழைபடா தெழுதி
ஆளுமை பெறவே ஆன மட்டும்
அழகொளிர் மின்னிதழ் அகத்திடை கொள்வீர்
நீளுறும் மரபினை நேர்பட வொழுகின்
நெஞ்சினில் கவிமலர் நீங்கா திருக்கும்
பாழுறும் மணத்தே பாநலம் மேவப்
பணிந்தே உரைப்பேன் பற்றுக மரபே!
***********************************************************************************
நெஞ்சத்தே பூக்கின்ற தாமரைக்கே வொப்பாம்
நிதம்பூக்கும் கவிமலர்கள் எண்ணிலடங் காது!
விஞ்சத்தான் செய்கின்ற கவித்திறத்தால் நாளும்
வியப்பூட்டும் கவிமலரை விளக்கமுறத் தந்த
பஞ்சைத்தான் நேர்கொண்ட மென்மையுள னன்றோ!
பார்போற்றும் பாவலனாம் எம்.கே.ஞா. சேகர்
துஞ்சத்தான் முடியாமல் அவரளித்தக் கவியின்
சுவைமாந்திக் களித்திட்ட நாள்பலவும் உண்டாம்
மண்ணழகைக் காட்டுவது மரமென்று சொன்னால்
மரபழகைக் காட்டுவது பாவினமே என்போம்
பண்ணழகில் சொல்வார்த்தும் உவமைநலஞ் சேர்த்தும்
பளபளக்கும் முத்தான எழுத்தினால் நித்தம்
கன்னலையும் மிஞ்சுகின்ற கருத்தான படைப்பால்
காலத்தை வென்றிருக்கும் நினைவலையோ நீங்கா
விண்ணழகை உலகுக்கே அளிக்கின்ற நிலவாய்
வியனுலகில் கவிஞர்தம் புகழ்மறையா தினிதே