இயல்கலை அரசன் காசிதாசன் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
இயல்கலை அரசன் காசிதாசன் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

ஞாயிறு, 4 ஜூன், 2023

இயல்கலை அரசன் காசிதாசன்


 

தமிழ்த்தோற்றம்
  
தீய்ந்த கதிர்ப்பிழம்பின் 
    திரிந்த நிலவுலகில் 
தோய்ந்த தமிழினத்தின் 
    தொன்மம் பறைசாற்றும் 
வேய்ந்தர் வளர்த்ததமிழ் 
    வெம்புலவோர் ஆண்டதமிழ்
ஆய்ந்து திறம்போற்றும்
    அரங்கிற் றிருவேற்றம் !
 
சாய்ந்த தமிழினத்தைச்
    சற்றே நிமிரவைக்கும் 
பாய்ந்த தமிழ்வெள்ளம்
    பருகப் பயிர்சிரிக்கும்
தேய்ந்த பழம்பெருமை
    திரும்பத் தலைதூக்கும்
பாய்ந்து வருகுதெனப்
    பகரும் தமிழ்த்தோற்றம்!

*****************************************************************************************
விழா எடுத்தோம்!

முப்புறம் ஆழி சூழ
 
   முத்தமிழ் வளர்த்த நாட்டை 
அப்புறக் கடல் புறக்கி 
    அணிமலை நாடு வந்தும் 
தப்புறக் கலைக ளோடு
    தமிழறம் வளர்த்த மாந்தர்
ஒப்புற உயர்ந்து நின்றார் 
    உழைப்பினில் உலகை வென்றார்!
 
வெற்றியைத் தொடர்வ தற்கும்
   வீழ்ந்தவர் மீள்வ தற்கும்
நெற்றி நீர் நிலத்திற் சிந்த 
   நேர்வழி சென்ற வர்க்கும்
பெற்றியைத் தந்த மேன்மைப்
   பேறுரு தமிழை வாழ்த்த
உற்றதோர் விழாவெ டுத்தோம்
    உயர்த்திட வருக! வாழ்க!  

கவிஞர் சரவணன் இராமசந்திரன்

  நல்மழையே நில்!   வெள்ளத்தால் அடைந்ததுயர் விளக்கிடவும் கூடிடுமோ ? உள்ளத்தில் குடிகொண்ட உறுதியையும் போக்கிற்றே! கடும்வெள்ளம் கண்டவிடம் கண்ணு...