கவிஞர் எஸ்.பி. செல்லையா லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
கவிஞர் எஸ்.பி. செல்லையா லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

ஞாயிறு, 4 ஜூன், 2023

கவிஞர் எஸ்.பி. செல்லையா


 

இதற்குத்தானா
 
மாலையிலே பூந்தோட்ட மரத்தின் மீது
      மகிழ்வோடு காத்திருப்பீர் மாங்கா யொன்றை
சேலையிலே மறைத்தவா றங்கு நானும்
      தெரியாமல் வந்திடுவேன்! கதிரோன் றன்னைக்
காலையிலே கண்டதொரு கமலம் போலக்
      களிப்போடு குதித்தோடி வருவீர்! அந்த
நாளையிலே நடந்ததெல்லாம் மறந்தீர்! என்றன்
      நலமெல்லாம் உண்டீரே இதற்குத் தானா?
 
கையோடு கைகோத்துக் கடலி னோரம்
        காற்றுமணற் பரப்பதனி லமர்ந்தோ மன்று
“மெய்யெல்லாம் மின்சாரம் தாக்கு துந்தன்
      மேனிதனைத் தொட்டவுடன்” என்று மெல்லக்
“கொய்யாவே! என்னின்பக் குமுதப் பூவே!
      கொல்லாதே” எனஉரைத்து மடியிற் சாய்ந்து
கொய்யாமற் கொய்தணைத்து இன்பஞ் சேர்த்துக்
      கொவ்வைஇதழ் சுவைத்தீரே! இதற்குத் தானா?
 
“காதலுக்குச் சாதியிலை! கலக்கம் வேண்டாம்
      கற்கண்டே! உனைப்பிரியேன்! நீதான் இன்றேல்
நாதமிலா வீணைநரம் பாகும் வாழ்வு
      நம்பிடுவாய்! இதுஉறுதி” என்றே சொல்லி
மோதுதிரை யன்னமனம் குளிரச் செய்து
      முகத்தோடு முகம்புகைத்து முழுமை இன்பப்
போதையெல்லாம் என்றனிடம் புகன்றீர்! பெண்மைப்
        பொருளெல்லாம் துய்த்தீரே! இதற்குத் தானா?
 
“குடித்தஉட னுயிர்போக்கும் விடமோ? இந்தக்
      கோதையவள் வெண்பற்க ளிடையி னூறல்!
தடித்தஉளக் குணமுடையார் பிரித்து வைத்த
       சாதிமதச் சூழ்ச்சியெலாம் பாறை மோதி
வெடித்துநனி சிதறுகின்ற அலையாம்! நந்தம்
        விருப்பந்தான் ஈடேறும்! அமிழ்தே” என்று
பிடித்துஉட லிறுகணைத்து வெறித்துப் பார்த்துப்
           பீடுண்டு சென்றீரே! இதற்குத் தானா?

கவிஞர் சரவணன் இராமசந்திரன்

  நல்மழையே நில்!   வெள்ளத்தால் அடைந்ததுயர் விளக்கிடவும் கூடிடுமோ ? உள்ளத்தில் குடிகொண்ட உறுதியையும் போக்கிற்றே! கடும்வெள்ளம் கண்டவிடம் கண்ணு...