வென்றிசேர் குமரன் ...விளங்குபுகழ்த் தொண்டன்!
செந்தா மரைத்தவிசில் சீரா யமர்ந்தருள்செய் திருமா மகள் அருளினால்
செழூமைவள மொளிருபிறை நகரிற் பிறந்தனன் செம்மை யறம்புரியவே
பைந்தா துகும்மலரின் மணமா யருட்பணிகள் பண்ணுமுயர் கருணாகரன்
பண்பாரம் மாக்கண்ணு வுடனென்றிப் புரிந்திட்ட பயன்தவத் துற்றசெழியன்
நந்தாத நெஞ்சோடு கல்வியே கண்ணாக நாடிப் பயின்றபுதல்வன்
நற்றமிழ் ஆசிரிய னாகியே போதித்த நல்லகுரு நாதனிவன்காண்
கொந்தார் மலர்க்குழலி குணப்பேழை வசந்தாவைக் கோணாது கரம்பற்றியோன்
குழவுதமிழ்ப் பண்பாளன் குமரனெனும் பெருந்தொண்டன் குவலயந் தனிலுய்கவே!
உதிக்கின்ற செங்கதிரின் ஒளியன்ன துடிப்போடு உயர்பணிக ளாற்று தலைவன்
ஒப்பற்ற தமிழ்த்தொண்டு புரியுமிவன் அரசியல் உயர்வான நிலவாகியோன்
கதிக்கின்ற தாளாண்மை சமுதாய நுடம்போக்கும் கண்ணியக் கடமையுடையான்
கவிவாணர் தமக்கெல்லாம் இனிக்கின்ற சுவைப்பாகு கலைக்கொண்டால் தமிழ்த்தென்றலாம்
மதிக்கின்ற பெரும்பண்பு மலையாத தமிழ்நெஞ்சு வைரத்தின் ஒளிபோன்றவன்
வளையாத நெறியாளன் அரிவாளார்க் குபகாரன் வற்றாத தமிழ்ப்பண்பினன்
நிதிக்குவையை உருவாக்கி இந்தியர்தம் துயர்போக்க நெடுஞ்சேவை யாற்றுதலைவன்
நெஞ்சாரப் போற்றதும் குமரனெனும் அறத்தென்றல் நீளகவை யுடன்வாழ்கவே!
தொண்டர்க்குத் தொண்டனாய் தொழிலாளர் தலைவனாய் சுவைத்தமிழின் ஆசிரியனாய்
சுயநலந் துறந்தபெருந் தியாகத்தின் செல்வனாய் துய்யதமிழ்ப் பேச்சாளனாய்
எண்டிசையும் புகழோங்கும் ம.இ.கா. தலைவனாய் எழில்கொஞ்சம் பேராவிலே
ஏற்றமாய் சட்டமன் றத்திலோர் உறுப்பாகி இசைப்பணிக ளாற்று பொழிலாய்
வென்றிசேர் குமரனாய் விளங்குபுகழ்த் தொண்டனாய் மேவுமுயர் அருளாளனாய்
மெய்ப்பணிக ளாற்றியே பொன்விழாக் கண்டபெரும் வித்தகச் செழுஞ்செம்மலே
அண்டிவந் தோர்க்குற்ற துணையான வள்ளலாய் அடக்கமுயர் பொறைமிக்கவா
அண்ணலாய் நீவாழ்க நூறாண்டும் அதன்மேலும்
அளப்பரிய புகழ்சூழவே!