கல்விச்செம்மல் வாஞ்சிதேவன் சோமசன்மா லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
கல்விச்செம்மல் வாஞ்சிதேவன் சோமசன்மா லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

புதன், 31 மே, 2023

கல்விச்செம்மல் வாஞ்சிதேவன் சோமசன்மா


உண்மை கணக்கு!

உறங்கினாய்! நாளைநீ விழித்திடுவாயா?

      உறுதியாய்ச் சொல்லடா எனக்கு! - உலக

அரங்கத்தில் என்றேனும் அழிந்திடுவாயே

      அறிந்திடு வாழ்க்கையோர் விளக்கு!

     

பிறத்தலும் இறத்தலும் உன்வசம்தானா?

      பிதற்றலும் பீற்றலும் எதற்கு? - நீ

சிறப்பதும் பிறர்தயை புரிந்ததனாலோ

      சிந்தித்து இதயத்தில் நிறுத்து!

 

வரம்பெனும் ஒன்றைநீ கொண்டிருந்தாயா?

      வகையின்றி நீள்வதுன் இழக்கு!- எது

நிரந்தர மானதோ கண்டிடுவாயேல்

      நிம்மதி உன்விதி விலக்கு!

 

அறம்பொருள் இன்பமாம், வகுத்திருந்தாரே

      அறத்திற்கேன் முதல்நிலை சிறப்பு? - நீ

இரக்கத்தின் சிகரமாய் திகழ்ந்திடத்தானே

      இன்னுமா உணர்ந்திட மறுப்பு?


பிறப்பவர் யாவரும் இறப்பவர்தானே

      பிறகென்ன ஆயிரம் பிணக்கு?- உன்

இறப்பையும் தாண்டி நிலைப்பவைதானே

      இருப்பவர் பார்த்திடும் கணக்கு!


தமிழணங்கு

முருகனெனும் அழகனவன் உறவை வென்றாள் - என்

      மூச்சியக்கிப் பேச்சுருவில் ஒலித்து வந்தாள்!

அருமைமிகு பொருட்செறிவால் தனித்து நின்றாள் - சொல்

      ஆட்சியிலே வேற்றுமொழிக்(கு) உருவம் தந்தாள்!

 

பெருகிவரும் தொழில்நுட்பம் பழகிக் கொண்டாள் - புதுப்

      படிவத்திற்கும் பேர்புகன்று மகிழ்வு கண்டாள்!

திருப்பம்தரும் உலகமய திசையில் சென்றாள் - மிகச்

      சிறப்புடனே இணையத்தளம் நிறைந்து நின்றாள் !

 

குறுகல்மனம் மிக்கவரைக் கடிந்து நொந்தாள் - தாம்

      குடியிருக்கத் தமிழ்ப்பள்ளி அணுகிச் சென்றாள்!

விருப்புடைய தக்கவரை இணைந்து கொண்டாள் அவர்

      வரும்படிக்கோர் வழிவகையும் வலிந்து தந்தாள்!

 

மெருகுடைய நாளிதழ்கள் பதிப்பில் வந்தாள் - ஒலி

      மிதந்து வரும் வானொலியின் படைப்பில் நின்றாள்!

மறுப்பறியா தேன்குறளின் சிறப்பில் வென்றாள் - நல்ல

      மதிபடைத்த சான்றோரின் பிறப்பில் வந்தாள்!

 

கவிஞர் சரவணன் இராமசந்திரன்

  நல்மழையே நில்!   வெள்ளத்தால் அடைந்ததுயர் விளக்கிடவும் கூடிடுமோ ? உள்ளத்தில் குடிகொண்ட உறுதியையும் போக்கிற்றே! கடும்வெள்ளம் கண்டவிடம் கண்ணு...