ஞானப்பிள்ளை
கலைகளெல்லாம் இவரானார் கவிதைப் பண்ணின்
தளைஅசைசீ ரடிகளிலே தவழும் தென்னார் !
விளைபயிராய் அறிவூற்றை மாண வர்க்கு
விதைத்தறிவை ஊட்டிவழி விளக்கும் நல்லார் !
மலையளவு ஞானத்தால் மலர்ந்த வாணர் !
மறைபொருளை சுவைபடவே வார்த்த தேனார் !
இலைஇவர்போல் ! இராமதாசர் இறையின் வம்சம் !
இவர்சொல்லக் கற்றவர்கள் என்றும் உச்சம் !
பச்சிலையும் வேர்விதையும் மருந்தாய் மாறும் !
பலவண்ணப் பூக்களுமே பயனாய் ஆகும் !
அச்சங்கள் மூட்டும்நோய் அமைதி யாகும் !
அத்தனையும் சுவாமியிடம் அடங்கிப் போகும் !
உச்சத்தில் உள்ளகுரு உதவிப் போனான் !
உயர்ஞானம் தரும்மகளும் ஒன்றிப் போனாள் !
மிச்சத்தைச் சொல்வதற்கோ ஏது மில்லை !
மேன்மைமிகு இராமதாசர் ஞானப் பிள்ளை !
*******************************************************************************************
துலங்கிய வாழ்வில் அன்று
தொடர்ந்தன இன்பம் மானே!
வழங்குவ தெல்லாம் இன்று
வதைத்திடும் துயரம் தானே !
விளங்கிடும் கொரோனா வாலே
விடியலும் இரவாய்ப் போச்சு!
கலங்கியக் கண்ணீ ராகக்
கதைகளின் முடிவும் ஆச்சு!
உருவமே இல்லா தொன்றால்
உலகிலே கொள்ளைச் சாவு!
பெருகிய கிருமி யாகி
பிழைகளை ஊட்டு திங்கே !
இருமலும் சளியும் நெஞ்சில்
இறுக்கமும் கூடி வாட்டும்!
கருகிய குடும்ப மாக்கிக்
கனலதை யூட்டிக் கொல்லும் !
சினமதைக் குறைத்தி டாது
சீறியே பாய்ச்சல் பாயும் !
மனமெனும் ஒன்றே இல்லா
மதியிலாக் கொரோனா பேயே!
இனங்களைப் பேத மின்றி
இறந்திட வைக்கும் ஏமன் !
குணமுடன் இல்லத் துள்ளே
குந்தியே
இருத்தல் நன்றே !