கவிச்சுடர் பெருங்குளம் ஹாஜா லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
கவிச்சுடர் பெருங்குளம் ஹாஜா லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

ஞாயிறு, 4 ஜூன், 2023

கவிச்சுடர் பெருங்குளம் ஹாஜா


 

பண்ணை மலைநாடு

வண்டு மலரூத வசந்தம் மருவிட
            வானத்து வட்டநிலா
வளர்ந்து கவின்கூட்ட வைரமணித் தாரகைகள்
            வார்க்கும் தண்ணொளி

குண்டு மலர்மல்லி குழல்விரித்த நறுமணம்
            குழைந்தே இதழ்காட்ட
கொவ்வைக் கனியமுது கோலக் கருமுகில்
            கூவும் குயிலினத்தைக்

கண்டு விளையாடும் நீலக் கடலொலியில்
            கலைகூட்டும் கயலினம்
      கதிர்வீசும் பவளநிறக் கதிரவன் கீழ்உதயக்
            காட்சி சேர்வைகை

பண்டு சரிதையைப் பரத்தும் பொன்னோடு
            பண்பாடும் புலமையிலே
      பளிச்சிடும் தங்கவயல் பால்ஊற்று ரப்பர், ஈயம்
             பண்ணை மலைநாடு!

*****************************************************************************************
மனச்சிறகுகள்

வானில் சிறகுகள் விரிக்கிறது – மனம்
வட்ட நிலாவில் குளிக்கிறது!
வேனில் கூதல் காய்கிறது – ஒரு
விதையில் விருட்சம் காண்கிறது!
 
உலகம் சுற்றச் செல்கிறது – மனம்
உறவைப் பெருக்கிக் கொள்கிறது!
அழகை நாடிப் போகிறது – அதில்
ஆழம் காட்ட மறுக்கிறது!
 
தடைகள் கடந்தும் நிள்கிறது – மனம்
தாளம் போட்டுக் குதிக்கிறது!
விடைகள் கேட்டுத் தெளிகிறது – பெரும்
வெள்ளம் போலப் பாய்கிறது!

புதுமை நோக்கி நடக்கிறது – மனம்
பொக்கிஷ மாக இருக்கிறது!
பொதுமை தேடித் துடிக்கிறது – மதுப்
புகழில் இன்பம் காண்கிறது!
 
கட்டுப் பாடுகள் உடைக்கிறது – மனம்
கவிதை பாடிக் களிக்கிறது!
எட்டும் வரைகள் இல்லாமல் – அந்த
எட்டாக் கோள்களில் நுழைகிறது!

கவிஞர் சரவணன் இராமசந்திரன்

  நல்மழையே நில்!   வெள்ளத்தால் அடைந்ததுயர் விளக்கிடவும் கூடிடுமோ ? உள்ளத்தில் குடிகொண்ட உறுதியையும் போக்கிற்றே! கடும்வெள்ளம் கண்டவிடம் கண்ணு...